மெனிக்கே மகே ஹித்தே…” என்ற பாடல் மூலம் இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் பெருமை சேர்ந்த இளம் பாடகி யொஹானி டி சில்வாவுக்கு, கொழும்பில் காணியொன்றை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி பத்தரமுல்ல − ரொபட் குணவர்தன மாவத்தையிலுள்ள, வீதி அபிவிருத்தி அதிகாரச் சபைக்கு உரித்தான 9.68 பச்சர்ஸ் காணி அவருக்கு பரிசாக வழங்கப்படவுள்ளது.
இதற்கான அமைச்சரவை பத்திரத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச சமர்ப்பித்துள்ளார்.
#SrilankaNews
Leave a comment