newsss
இலங்கைசெய்திகள்

குருநகர் வாள்வெட்டு – அறுவர் சரணடைவு

Share

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் தலைமறைவாகியிருந்த 6 பேர் இன்றைய தினம் பொலிஸாரிடம் சரண் அடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு வேளையில் நடத்தப்பட்ட இந்த வாள்வெட்டு சம்பவத்தில் 24 வயதுடைய இளைஞர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

படுகாயமடைந்து உயிரிழந்த இளைஞனை திட்டமிட்டு தந்திரமாக அழைத்து வாள்வெட்டு நடத்தினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கெமி என அழைக்கப்படும் குழுவினரே தமது மனைவி பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகியிருந்தனர்.

இந்த நிலையில் விசேட பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அவர்கள் தலைமறைவாக முயன்றும் இனி தப்ப முடியாதென்ற நிலையில், சட்டத்தரணி ஒருவர் ஊடாக 6 பேர் சரணடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...