கூட்டமைப்புடன் பேச்சுக்குத் தயாராகும் கோட்டா!-

Gtta and TNA

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும், கூட்டமைப்பிற்கும் இடையில் விரைவில் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஸ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையினை இம்மாத இறுதி வாரத்தில் இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருதரப்புக் கலந்துரையாடலின் போது, இனப்பிரச்சினைக்குத் தீர்வு, வடக்கு கிழக்கு அபிவிருத்தி, மனித உரிமைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட முக்கியமான விடயங்கள் குறித்து ஆராயவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

#SrilankaNews

Exit mobile version