10 6
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் – ஒருவர் மீது கத்திக்குத்து

Share

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் – ஒருவர் மீது கத்திக்குத்து

நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றும் இரு ஊழியர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறி, ஒருவர் மற்றைய ஊழியரை கத்தியால் குத்த முயற்சித்துள்ளார்.

குறித்த இரு ஊழியர்களும் நாடாளுமன்ற உணவு வழங்கல் பிரிவில் பணியாற்றுவதாகவும், கேக் துண்டு தொடர்பாக வாக்குவாதம் முற்றியதாகவும் கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றியதையடுத்து, இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.

இதன்போது உணவு ஆய்வு தொடர்பான சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட உணவு மற்றும் பானங்கள் துறை ஊழியர்கள் மோதலை சமரசம் செய்தனர்.

இது தொடர்பாக நாடாளுமன்ற பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நாட்களில், அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகிறார்கள், அந்த பார்வையாளர்களுக்கு பணம் செலுத்தி உணவு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...

bike accident 1
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி.

நேற்றைய தினம், சிலாபம் – ஆனமடுவை வீதியில் 5ஆம் கட்டைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்...

oil price 14 2
இலங்கை

மீண்டும் அதிகரிக்கிறதா எரிபொருள் விலை ?

இன்று நள்ளிரவு முதல், மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் உலக சந்தையில்...