6 1
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள 80 இந்திய கடற்றொழிலாளர்கள்

Share

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள 80 இந்திய கடற்றொழிலாளர்கள்

சர்வதேச கடல் எல்லைக்கோட்டை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது 83 இந்திய கடற்றொழிலாளர்கள், இலங்கை நீதிமன்ற காவலில் இருப்பதாகவும் இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் இந்திய நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ராஜ்யசபாவில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், நான்கு இந்திய கடற்றொழிலாளர்கள் தண்டனைக்கு உட்படுத்துள்ளதாகவும், 169 இந்திய மீன்பிடி கப்பல்கள் இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 80 கடற்றொழிலாளர்கள் மற்றும் 173 மீன்பிடி படகுகளை விடுவிக்கக்கோரி 2024 ஜூலை 11 ஆம் திகதியன்று அனுப்பப்பட்ட தமிழக முதல்வரின் கடிதம் தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கவில்லையா என்று அவரிடம் கேட்கப்பட்டபோதே அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் உரிய அறிக்கைகள் கிடைத்தவுடன், இராஜதந்திர வழிகள் மூலம் இலங்கையில் உள்ள உயர் ஸ்தானிகரகம் இந்த விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினை, 1974ஆம் ஆண்டு அப்போதைய மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட புரிந்துணர்வினால் தோற்றம் பெற்றது.

எனினும் தற்போதைய மத்திய அரசு மனிதாபிமானம் மற்றும் வாழ்வாதார அக்கறைகளை முதன்மையாகக் கொண்டு அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு தீர்வை எதிர்பார்க்கிறது என்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 690749f63e1f3
இலங்கைசெய்திகள்

காவல்துறை உயர் மட்டத்தில் மாற்றம்: மூத்த டிஐஜி-களின் பதவிகள் இடமாற்றம் – நிர்வாகப் பிரிவில் சஞ்சீவ தர்மரத்ன நியமனம்!

காவல்துறையில் உள்ள மிக மூத்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் கடமைகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாகக் காவல்துறை தலைமையக வட்டாரங்கள்...

image 870x 68edd5575b92d
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் ‘போலி கடவுச்சீட்டு நாடகம்’ – இரட்டிப்புக் கோப்பு உருவாக்கப்பட்டது அம்பலம்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான...

caption 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு: 6 உண்டியல்களில் இருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு...

102018246 f892fa86 2cbc 44fd b1e2 ac87ac946aba
செய்திகள்இலங்கை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கோரி ஞானசார தேரர் கோரிக்கை: ‘பாதாள உலகக் குழுவினர் சதி’ என குற்றச்சாட்டு!

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா...