260074979 437701957883160 614129706809049115 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிண்ணியா விபத்து; மக்கள் போராட்டம்; படையினர் குவிப்பு (Video)

Share

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் இழுவைப்படகொன்று கவிழ்ந்ததில் 07 பேர் உயிரிழந்தைத் தொடர்ந்து, மக்கள் கடைகளை மூடி துக்க தினமாக அனுஷ்டிகின்றனர்

திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிழ்ந்ததில் பலர் நீரில் மூழ்கினர். இச்சம்பவம் இன்று (23) காலை இடம்பெற்றுள்ளது.

இதில் பயணம் செய்த 20 மாணவர்களில் ஆறு பேர் உட்பட எழுவர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் சம்பவ இடத்தில் அமைதி நிலையைப் பேணும் வகையில் வீதிகள் எங்கும் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த விபத்தில் உயிரிழந்த ஆறு பேரின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, சகு சஹீ (மூன்றரை வயது), சஹிலா (6 வயது), பரீஸ் பகி (6 வயது), சப்ரியா (30 வயது), ஷேஹப்துல் சாகர், எவ்.சரீன் (8 வயது) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதேவேளை, மீட்கப்பட்டவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கிண்ணியா படகு விபத்தின் பலி எண்ணிக்கை உயர்ந்ததைத் தொடர்ந்து கிண்ணியா மக்கள் வீதியில் டயர்களை எரித்துப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

#SrilankaNews

Share
தொடர்புடையது
11 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: வளைகுடா கடற்பரப்பில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் காரணமாக ஈரானின் ஹோர்முஸ் நீரிணை (Strait of...

10 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அருகே இரண்டாவது ஈரானிய கப்பல்: 87 சடலங்கள் மீட்பு – பாராளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!

இலங்கை கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்தில் (EEZ) இரண்டாவது ஈரானிய கப்பல் (IRINS Bushehr...

09 4
செய்திகள்உலகம்

ஈரான் அணு ஆயுதத் திறனை இழக்கும் வரை போர்நிறுத்தம் கடினம்: அவுஸ்திரேலிய, கனடிய பிரதமர்கள் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் கனடியப்...

08 4
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை அருகே மற்றொரு ஈரானிய கப்பல்: மனிதாபிமான அடிப்படையில் அனுமதி கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையின் பிரத்தியேகப் பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நிலைகொண்டுள்ள இரண்டாவது ஈரானிய கப்பல் (IRINS Bushehr என...