செய்திகள்
இலக்கத் தகடு அற்ற பேருந்து மோதியதில் மாணவி படுகாயம் (படங்கள்)
யாழ்ப்பாணம் – தாவடி சந்தியில், இன்று இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்
இன்று (23) காலை, இலக்கத் தகடு அற்ற பேருந்து ஒன்று மோதியதில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்துச் சம்பவத்தின்போது, மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவியும், நபர் ஒருவருமே, படுகாயமடைந்துள்ளனர்.
இவ்விருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்துக் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
You must be logged in to post a comment Login