குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு ஜனவரி முதல் மண்ணெண்ணையை QR போன்ற முறைகளின் கீழ் வழங்க ஜனாதிபதி யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் இந்திக்க அநுருத்த, தெரிவித்தார்.
பாராளுமன்ற அமர்வில் இன்று (13) கலந்துகொண்டு கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்து உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment