norochchola power
செய்திகள்அரசியல்இலங்கை

கெரவலப்பிட்டிய யுகதனவி மின்உற்பத்தி விவகாரம் – மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

Share

” கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் ஆரம்பக்கட்ட உடன்படிக்கை மட்டுமே கைச்சாத்திடப்பட்டுள்ளது. இன்னும் இரு உடன்படிக்கைகள் உள்ளன. அந்த உடன்படிக்கைகளே முக்கியமானவை.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசுகர தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற பங்காளிக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் பற்றி விவரிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” உரப்பிரச்சினை, யுகதனவி விவகாரம், அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு உட்பட பல விடயங்கள் தொடர்பில் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கியமை தொடர்பில் எமது நிலைப்பாட்டை அறிவித்தோம். அதன்போது ஆரம்பக்கட்ட உடன்படிக்கையே கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இன்னும் 2 உடன்படிக்கைகள் உள்ளன. அவையே முக்கியமானவை. எனவே, தேவையான யோசனைகளை முன்வைக்குமாறு நிதி அமைச்சர் எமக்கு தெரியப்படுத்தினார்.” – என்றார் தயாசிறி ஜயசேகர.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 6719ef7b673a7
அரசியல்செய்திகள்

டயானா கமகே கடவுச்சீட்டு விசா வழக்கு: மேலதிக சாட்சியங்களுக்காக பிப். 16க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத்...

Waqf Board Donates Rs 10 Million 1170x658 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் சேதமடைந்த மதத் தலங்களைப் புனரமைக்க: வக்ஃப் சபை 10 மில்லியன் நிதி நன்கொடை!

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால்...

Untitled
அரசியல்இலங்கைசெய்திகள்

கிராம உத்தியோகத்தர்களுக்கு எதிரான பொதுவான குற்றச்சாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் – இம்ரான் மகரூப் கோரிக்கை!

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும்,...

24 66c584aba0b91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வெல்லவாய – தனமல்வில விபத்து: ஒருவர் பலி, 4 பேர் காயம்!

வெல்லவாய – தனமல்வில வீதியில் உள்ள தெல்லுல்லப் பகுதியில் இன்று (டிசம்பர் 15) ஏற்பட்ட கோர...