tamilni 355 scaled
இலங்கைசெய்திகள்

கெஹலியவுக்கு மறுக்கப்பட்ட பிணை

Share

கெஹலியவுக்கு மறுக்கப்பட்ட பிணை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் உத்தரவு பெப்ரவரி 29 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் மனித பாவனைக்கு உதவாத தரம்குறைந்த இம்யூனோகுளோபிலின் மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பிலான விசாரணைகளை அடுத்து கடந்த 2ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கெஹலிய கைது செய்யப்பட்டார்.

இதனடிப்படையில், மாளிகாகந்த நீதிமன்றில் கடந்த 3ஆம் திகதி முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அதன் பின் சுகயீனம் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் கெஹெலிய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் தரமற்ற இம்யூனோகுளோபிலின் மருந்து இறக்குமதி தொடர்பான வழக்கு மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள 06 பேர் மற்றும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள ஒருவர் என 07 பேர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் கெஹெலிய ரம்புக்வெல்ல மாத்திரம் நீதிமன்றத்துக்கு வருகை தரவில்லை.

அதற்குப் பதிலாக அவர் கடுமையான உயர் குருதி அழுக்க நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை நிர்வாகத்தின் மருத்துவ சான்றிதழ் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கெஹலியவின் சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன , கெஹெலியவின் உடல்நிலையை காரணம் காட்டி அவுருக்கு பிணை வழங்குமாறு நீதிமன்றத்தில் வாதம் செய்தார்.

எனினும் கெஹெலிய உள்ளிட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 29ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி லோசனா அபேவிக்கிரம உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் கெஹெலியவுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்குமாறு சிறைச்சாலை நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...

25 6939a5588b95b
இலங்கைசெய்திகள்

மூன்றாம் தவணையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைமை இல்லை: பரீட்சைகள் இரத்து!

இந்த ஆண்டு மூன்றாம் தவணை முடிவில் பாடசாலை மாணவர்களுக்கு எந்த விதத்திலும் மதிப்பெண் வழங்கும் முறைமை...

images 5 4
இந்தியாசெய்திகள்

13 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 3 ஆண்டுகள் சிறை!

தமிழகத்தின் தூத்துக்குடியில் 2012ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு...