Ranil Karu
அரசியல்இலங்கைசெய்திகள்

20ஐ உடன் நீக்குங்கள்! – ரணிலுக்குக் கரு அணி கடிதம்

Share

நாட்டு மக்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்துவதற்கும், 20 ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு முன்னாள் சபாநாயகரும் சமூக செயற்பாட்டாளருமான கரு ஜயசூரிய தலைமையிலான 155 சமூகச் செயற்பாட்டாளர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுத்துமூலமான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மீதும் அவர் தலைமையிலான அரசின் மீதும் தொடர்ச்சியாக மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில் தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இடைக்கால அரசு ஒன்று நிறுவப்பட்டது. எனினும், இந்த இடைக்கால அரசுக்கும் பொதுமக்கள் மத்தியில் அதிகமான எதிர்ப்பு எழுந்திருக்கின்றது. இந்நிலையிலேயே முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான 155 பேர் இவ்வாறு கடிதம் ஒன்றை எழுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் அங்கீகரிக்கக்கூடிய அரசை அமைத்து நிவாரணங்களை வழங்குமாறும் கருஜயசூரிய உள்ளிட்ட 155 சிவில் சமூகப்பிரதிநிதிகள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 657a8557d51bd md
செய்திகள்இலங்கை

காய்கறி விலையில் கடும் அதீத உயர்வு: பச்சை மிளகாய் 1,000 ரூபாயைத் தாண்டியது; மக்கள் கடும் அவதி!

இலங்கையின் சில பகுதிகளில் தாழ்நிலக் காய்கறிகளின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதீத உயர்வை எட்டியுள்ளதாகச்...

25 6943e3aa87891
செய்திகள்உலகம்

தன்னை ‘ஹீரோவாக’ காட்டிக்கொள்ள 12 நோயாளிகளைக் கொன்ற மருத்துவர்: பிரான்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு!

பிரான்சில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் திட்டமிட்டு விஷ ஊசி செலுத்தி, 12 பேரின் மரணத்திற்கு காரணமான...

1813418 flight12
செய்திகள்இந்தியா

அடர்ந்த மூடுபனி: டெல்லி விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

வட இந்தியா முழுவதும் நிலவி வரும் கடுமையான மூடுபனி காரணமாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச...

674b2a65b606d hardik pandya in frame 191544440 16x9 1
விளையாட்டுசெய்திகள்

தென்னாபிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி: 16 பந்துகளில் அரைசதம் அடித்து ஹர்திக் பாண்டியா புதிய சாதனை!

தென்னாபிரிக்காவிற்கு எதிரான 5-ஆவதும் கடைசியுமான டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில்...