CEB
இலங்கைசெய்திகள்

களனிதிஸ்ஸ இ.மி.ச வசம்!!

Share

163 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சொஜிட்ஸ் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தை தாம் கையகப்படுத்தி உள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமான சொஜிட்ஸ் களனிதிஸ்ஸவினால் இயக்கப்பட்டு வந்த 163 மெகாவோட் சுழற்சி மின் நிலையம் மார்ச் 28 ஆம் திகதி கையகப்படுத்தப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் சொந்த மின் நிலையத் திறனை 163 மெகாவோட்டால் அதிகரிக்கச் செய்துள்ளதாக  சபை குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக பொருளாதார தடைகள் காரணமாக சவால்கள் மற்றும் சட்ட அம்சங்கள் உட்பட பல சிக்கல்கள் மின்சார சபையின் பேச்சுவார்த்தைகள் மிகவும் கடினமாக இருந்த போதும் சபை அதை சமாளித்து ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தை  வெற்றிகரமாக கையகப்படுத்தியுள்ளது.

2000 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அரசாங்கக் கொள்கை கட்டமைப்பின் கீழ், சொஜிட்ஸ் களனிதிஸ்ஸ தனியார் நிறுவனத்துடன், ஒரு சுயாதீன மின் உற்பத்தியாளராக கையொப்பமிட்டதாக சபை சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த ஒப்பந்தம் 20 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்ற நிலையில், மின் கொள்வனவு ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி 2022 ஆம் ஆண்டு மின்நிலையத்தை கையகப்படுத்துவதற்கான செயல்முறை மின்சார சபையினால் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FUIXfciu0r8En4NCdFEIo
செய்திகள்உலகம்

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு சிறைத்தண்டனை: லஞ்சம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாக நீதிமன்றம் தீர்ப்பு!

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் (Yoon Suk...

1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...

Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக்...

ed1ef740 7f31 11f0 ab3e bd52082cd0ae.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை: சட்டமா அதிபர் நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும்...