20230507 113432 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஒரு சிலர் விடுகின்ற தவறுகள் ஒட்டுமொத்த தேசியத்தின் இருப்பையே சிதைத்து விடும்!

Share

ஒரு சிலர் விடுகின்ற தவறுகள் ஒட்டுமொத்த தமிழ் தேசியத்தின் இருப்பையே சிதைத்து விடும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார்.

கந்தரோடையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

சில வருடங்களுக்கு முன் திருவடிநிலை பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றபோது படையினர் அந்த காணி தங்களுக்கு விற்கப்பட்டது என்று கூறி காணியுறுதிப் பத்திரத்தை எம்மிடம் காட்டினர். ஆகவே பொதுமக்கள் இவ்விடயத்தில் விழிப்பாக இருக்க வேண்டும்.

குறிப்பாக ஒரு சிலர் இராணுவ முகாம்களின் விஸ்தரிப்புகளுக்காகவும் பௌத்த விகாரைகள் அமைப்பதற்காகவும் தங்கள் காணிகளை விற்பனை செய்யும் போது அது தமிழினத்தின் இருப்பையே சிதைத்து விடும்.

இவ்வாறு காணிகளை விற்பதை தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பும் எமக்கு இருப்பதுடன் இவ்வாறு இராணுவ முகாம்களுக்கோ விகாரைகளுக்கோ காணி விற்பனை செய்யும் மனநிலையே பொதுமக்களுக்கு ஏற்படாதவகையில் நாம் செயற்படவேண்டும். – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...