14 13
இலங்கைசெய்திகள்

குழந்தை பிறப்பில் வீழ்ச்சி : ஜப்பான் அரசின் அதிரடி நடவடிக்கை

Share

குழந்தை பிறப்பில் வீழ்ச்சி : ஜப்பான் அரசின் அதிரடி நடவடிக்கை

ஜப்பான் (japan)நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வந்ததை அடுத்து, அந்நாடு சில அதிரடி சலுகைகளை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

ஜப்பான் நாட்டில் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் குழந்தை பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டு பதிவானதை விடவும் கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் 5 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து, குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற நடைமுறையை ஜப்பான் அரசு கொண்டுவந்துள்ளது.

அரசு அலுவலகங்களில் முதல் கட்டமாக இந்த சலுகை கொண்டு வரப்பட உள்ளதாகவும், இதனை அடுத்து படிப்படியாக தனியார் நிறுவனங்களுக்கும் இந்த சலுகை கொண்டு வரப்படும் என்றும் கூறப்படுகிறது.

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாகவும், இதனால் ஊழியர்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவார்கள் என்பதால் உடல் மற்றும் மன அளவில் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்றும், இந்த சலுகை காரணமாக அடுத்த ஆண்டு குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது

ஜப்பான் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் திருமண உறவில் மற்றும் குழந்தை பெறுவதில் நாட்டம் இல்லாதவர்களாக மாறி வருவதாக ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...