வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி யாழ் இளைஞனிடம் மோசடி
யாழ்ப்பாண இளைஞர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி யாழ்.வலிகாமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சுமார் 25 இலட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தாலியில் வசிக்கும் நபர் ஒருவர் மூலம் வெளிநாட்டுக்கு எடுப்பதாக கூறி யாழ்ப்பாணம் வலிகாமத்தை சேர்ந்த நபர் ஒருவர் தரகர் மூலம் குறித்த இளைஞனை அணுகியுள்ளார்.
இளைஞனுடைய சகல விபரங்களையும் பெற்றுக்கொண்ட தரகர் போலி விசாவினை இத்தாலியில் வசிக்கும் நபர் மூலம் பெற்றுக்கொண்டு இளைஞனுக்கு வழங்கியுள்ளனர்.
வீசாவினை தூதரகத்திடம் காண்பித்த போது போலியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட இளைஞன்,
இத்தாலியில் வாசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரே பிரதான சூத்திரதாரி.