Jaffna university.jpg
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்.பல்கலை மாணவர்கள் மோதல்: ஐவர் காயம்

Share

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் மூன்றாம் வருட பெரும்பான்மையின மாணவர்கள் தங்கியிருந்த வீடொன்றில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 5 மாணவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த சனிக்கிழமை பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியின்றி இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களிடேயே இடம்பெற்ற துடுப்பாட்ட சுற்றுப் போட்டியில் மோதலொன்று ஏற்பட்டது.

இதனையடுத்து இதில் தலையிட்ட கோப்பாய் பொலிஸார் நிலைமையை சுமூகமாக்கிய போதும், நேற்று ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி பகுதியில் வீடொன்றில் தங்கியிருந்த அந்த மாணவர்கள் மதுபோதையில் முரண்பட்டுக் கொண்டதனால் 5 மாணவர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விடுமுறை நேரத்தில் இந்நிகழ்விற்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதிக்காத போதும், பொலிசாரின் அனுமதி பெற்று பெரும்பான்மையின மாணவர்கள் நிகழ்வை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...