24 6619fcded616b
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை தொடர்பில் தகவல்

Share

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை தொடர்பில் தகவல்

யாழ்ப்பாணம் (Jaffna) மற்றும் சென்னை (Chennai) இடையிலான விமான சேவையை இன்டிகோ (Indigo) நிறுவனம் ஜுன் மாதத்தில் ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (Airport and Aviation Services (Sri Lanka) Ltd) (AASL) இன்டிகோ (Indigo) விமான சேவையுடன் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தியது.

அதன்படி, இண்டிகோ ஜுன் 1, 2024 முதல் யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையே தினசரி விமானச் செயல்பாடுகளுடன் நேரடி விமானச் சேவையைத் தொடங்கும்.

இந்த இணைப்பு வட மாகாணத்தில் பயணம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தும், இரு நாடுகளுக்கு இடையிலான கலாச்சார மற்றும் மத பிணைப்புகளை வலுப்படுத்தும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (AASL) தலைவர் அதுல கல்கெட்டிய (Athula Galketiya,) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு – மும்பைக்கான நேரடி விமான சேவையை இன்டிகோ நிறுவனம் நேற்று (12) ஆரம்பித்திருந்தது.

இதன்படி செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் விமான சேவைகள் இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
11 2
செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபையில் அதிரடி வேலைநிறுத்தம்: 6 மணிநேர போராட்டத்தால் மின் விநியோகத்தில் பதற்றம்!

இலங்கை மின்சார சபையை (CEB) கலைத்து, அதனைச் சட்டவிரோதமான முறையில் மறுசீரமைக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும்...

10 2
செய்திகள்அரசியல்இலங்கை

புலனாய்வு அதிகாரிகளை வேட்டையாடுவது ஆபத்தானது: சுரேஷ் சலே கைது குறித்து அலி சப்ரி கடும் எச்சரிக்கை!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே கைது...

09 2
செய்திகள்அரசியல்இலங்கை

சுரேஷ் சலே கைது: ஆதாரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை – பொலிஸ் விளக்கம்

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே கைது...

08 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சுன்னாகத்தில் பெண்ணின் தங்கச் சங்கிலி பறிப்பு: மைலிட்டி முகாம் இராணுவச் சிப்பாய் அதிரடிக் கைது!

யாழ்ப்பாணம், சுன்னாகம் நகரப் பகுதியில் நேற்று (25) காலை பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற...