paniU scaled
இலங்கைசெய்திகள்

யாழ். – கிளிநொச்சி மக்களுக்கு புதிய குடிதண்ணீர் திட்டங்கள்

Share

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் 24 ஆயிரம் மீற்றர் கணம் கொள்ளளவு கொண்ட சுத்தமான குடிதண்ணீர் வழங்கும் இரண்டு முக்கிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இத் திட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் ஒக்ரோபர் 6ஆம் யாழ்ப்பாணம் வருகை தந்து ஆரம்பித்து வைக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் 60 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெறலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதில் ஒரு திட்டமாக 5 ஆயிரம் குடும்ப பயனாளிகளுக்கு உப்பு நீரை சுத்திகரித்து குடிதண்ணீராக மாற்றும் (SWRO) தொகுதி மூலம் குடிதண்ணீர் வழங்கப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக யாழ்.நகரை மையமாகக் கொண்டு ஒரு லட்சம் மக்களுக்கு பயன்தரும் 284 கிலோமீற்றர் தூரம் கொண்ட மற்றொரு குடிதண்ணீர் திட்டமும் ஆரம்பிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் திட்டங்கள் அனைத்தும் 2023 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு சுமார் 3 லட்சம் மக்கள் சுத்தமான குடிதண்ணீரை பெற ஏதுவாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 6956109675232
செய்திகள்உலகம்

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பயங்கர வெடிவிபத்து: பலர் உயிரிழப்பு!

சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா (Crans-Montana) நகரில் உள்ள ஒரு பாரில் (Bar) ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கிப்...

WhatsApp Image 2025 07 30 at 10.13.14 1
இலங்கைஅரசியல்செய்திகள்

குற்றவாளிகள் எங்கு இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் வலியுறுத்தல்!

வடக்கு அல்லது கிழக்கு என எந்தப் பிரதேசத்தில் யார் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் கடந்த காலத்தில்...

MediaFile 5
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கப்பட்ட 19 துப்பாக்கிகள்: CID தீவிர விசாரணை என அரசாங்கம் தகவல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் அது சார்ந்த விவகாரங்கள் குறித்து குற்றப்...

feeffef8b9eb82ce9b06f1c9550878a1460042ec
செய்திகள்அரசியல்இலங்கை

வரி ஏய்ப்பாளர்களுக்கு ஜனாதிபதியின் கடும் எச்சரிக்கை: வாகன இறக்குமதியை நிறுத்த முடியாது!

இலங்கையில் வரி ஏய்ப்பு செய்யும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பதவி அல்லது தராதரம் பாராது...