செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு செக் வைத்த யாழ் முதல்வர்!!

e65c08bd652f5870b0a7c15f80a13a37 XL
Share

இலங்கை போக்குவரத்து சபையின் சேவைகளை புதிய மார்க்கத்தில் முன்னெடுக்கவும் தனியார் போக்குவரத்து பேருந்து சேவைகளை புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கும் வகையில் யாழ் மாநகர முதல்வரால் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி இன்று வெளியிட்ட மாநகர முதல்வரின் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

1.தனியார் பேருந்து சேவையின் உள்ளூர், வெளியூர் சேவைகள், கொழும்பிற்கான இரவு நேர சேவைகள் நீண்ட தூர பஸ் நிலையத்தில் இருந்து எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்றும்

2.தனியாரின் உள்ளூர் சேவை பஸ்கள் நெடுந்தூர பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு தற்போது இயங்கி வரும் இடங்களில் 10 நிமிடங்கள் தரித்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும் அதேபோல் வெளி இடங்களிலிருந்து வரும் பிரயாணிகள் நெடுந்தூர பஸ் நிலையத்தில் இறக்கப்படுவார்கள் என்றும்

3.இலங்கை போக்குவரத்து சபை பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு செல்லும் நீண்ட தூரத்துக்கு பயணிக்கும் பெரிய பேருந்துகள் ஆஸ்பத்திரி வீதியினூடாக சத்திரசந்தியை அடைந்து அங்கிருந்து கேகேஎஸ் வீதியூடாக சென்று பிரதான வீதியை அடைந்து வெளி மாவட்டங்களுக்கான பயணத்தை மேற்கொள்ளும்

வெளியூர்களில் இருந்து வரும் பஸ்களும் அதே பாதையையே பயன்படுத்த வேண்டும் என்பதுடன் இப்பாதை ஒழுங்கு முறைஉடனடியாக நடைமுறைப் படுத்தப் படுகின்றது என்றும்

4.இலங்கை போக்குவரத்து சபை பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் நீண்ட தூரத்துக்கு பயணிக்கும் பெரிய பேருந்துகள் ஆஸ்பத்திரி வீதி ஊடாக வேம்படி சந்திக்குச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தல்களை பொதுமக்களுக்கு அறியத் தருவதாக  குறித்த ஊடக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

WhatsApp Image 2021 12 09 at 6.56.49 PM

 

#SriLanka

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...