tamilnaadi 80 scaled
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாண மக்களுக்கு நன்றி தெரிவித்த பாடகர் ஹரிஹரன்

Share

யாழ்ப்பாண மக்களுக்கு நன்றி தெரிவித்த பாடகர் ஹரிஹரன்

யாழ்ப்பாணத்தில் நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மாபெரும் இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்ப நிலையால் நிகழ்வு தடைப்பட்டது.

முற்றவெளி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரபல பாடகர் ஹரிஹரன் உட்பட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்ட நிலையில், இடைநடுவில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற அசம்பாதவிதம் குறித்து பாடகர் ஹரிஹரன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

“மறக்க முடியாத இசை நிகழ்ச்சிக்கு நன்றி யாழ்ப்பாணம். உங்கள் அதீத அன்பும் ஆதரவும் இசையின் ஒருங்கிணைக்கும் சக்தியை வெளிப்படுத்தியது. நாங்கள் நல்லிணக்கத்தையும் இணைப்பையும் ஒன்றாக, இணைந்து கொண்டாடினோம்.

இந்த நிகழ்வை ஒழுங்கமைப்பதில் அபார முயற்சி செய்தவர்களுக்கு சிறப்பு நன்றி. ஒவ்வொரு நொடிக்கும் நன்றியுடையவனாக இருக்கின்றேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...