யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4ஆவது கொரோனாத் தடுப்பூசி (பைசர்) ஏற்றும் பணி தற்போது இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில், யாழ்., நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட 3ஆவது கொரோனாத் தடுப்பூசி பெற்று 3 மாதங்கள் கடந்த அனைவரும் 4ஆவது தடுப்பூசியை (பைசர்) பிரதி சனிக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் முற்பகல் 11.30 மணிவரை கோண்டாவிலில் அமைந்துள்ள நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் பெற்றுக்கொள்ளலாம் என்று நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment