images 1
இலங்கைசெய்திகள்

யாழ். மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர் பணிப் புறக்கணிப்பில்!

Share

யாழ். மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பான கடிதம் யாழ் மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினரால் இன்றையதினம் யாழ். மாவட்ட செயலரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில்,

யாழ். மாவட்டத்தில் கடமையில் ஈடுபடும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சில பிரதேச செயலகங்களில் எரிபொருள் வழங்களின்போது புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்களுக்கான அத்தியாவசிய பணிகளில் ஈடுபட முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

எரிபொருள் விநியோகத்திற்கான ஒழுங்குபடுத்தல் பணிகளில் பிரதேச செயலாளர்கள் ஈடுபட்டுள்ளபோதும், அவர்களின் கீழ் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டு வரும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவைத் தேவையினை கருத்துகொள்ளாது, அவர்கள் புறக்கணிக்கப்பட்டு ஏனைய உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டமை தொடர்பாக எமக்கு முறையிடப்பட்டுள்ளது.

எனவே இதனை கண்டித்தும் எதிர்காலத்தில் எரிபொருள் வழங்களின் போது உரிய பொறிமுறையினை பின்பற்றி, எமது உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் விநியோகம் சீராகும் வரை நாளை 04 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் தொடர் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளோம் – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2022 07 03 at 6.04.09 PM

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...

articles2FrDVWgfzZnKKLShSLrBUZ
செய்திகள்இலங்கை

டித்வா பேரழிவில் இருந்து மீள இலங்கைக்கு பிரித்தானியா அவசர நிவாரண நிதி உதவி!

டித்வா புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட பாரிய பேரழிவில் இருந்து இலங்கை மீள்வதற்காக, பிரித்தானிய அரசாங்கமும் அவசர...

13845820 trump 12
செய்திகள்உலகம்

வெளிநாட்டினர் அமெரிக்காவில் புலம் பெயர்வதற்கான தடை நீண்ட காலம் நீடிக்கும்: ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!

வெள்ளை மாளிகைக்கு அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது ஆப்கானிஸ்தான் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச்...

articles2Fkdr4RAxh3Zzhkl5WtR4D
இலங்கை

மட்டக்களப்பில் போதிய பெற்றோல் கையிருப்பு: “செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்” – மாவட்ட அரசாங்க அதிபர் எச்சரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதியளவு பெற்றோல் (Petrol) கையிருப்பில் இருப்பதால், பொதுமக்கள் தேவையில்லாமல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில்...