IMG 20220325 WA0025
இந்தியாஇலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். பண்பாட்டு மையம் 28 இல் திறப்பு!

Share

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை திறந்து வைக்கப்படஉள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் எளிமையான முறையில் காணொளி முறையில் குறித்த நிகழ்வு இடம்பெறும் என யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் இன்றையமாநகர சபை அமர்வில் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம், அதனை யார் பராமரிப்பது என்பது தொடர்பில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் நீண்டகாலமாக திறந்துவைக்கப்படாதிருந்தது. இந்தநிலையில் தற்போது திறந்து வைக்கப்படவுள்ளது.

இதேவேளை இந்த நிகழ்வுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் யாழிற்கான இந்திய துணைத்தூதர் ,யாழ் மாநகர முதல்வர்,மாநகர ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்றையதினம் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இருப்பினும், திறப்பு விழாவிற்கான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை சம்பந்தப்பட்ட தரப்புகளால் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...