paffrel
அரசியல்இலங்கைசெய்திகள்

தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை!!

Share

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமைக்கு அமைய எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதியன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவது சாத்தியமில்லை என்று சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (பஃப்ரல்) தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவத்த பஃப்ரலின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

அரசாங்கம் மக்களின் வாக்குரிமையை பறிக்கும் என்று தாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என்றும் நீதிமன்ற தீர்ப்புகளைக்கூட புறக்கணிக்கும் நிலையில் இருப்பது வருந்தத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.

ஜனநாயகத்தின் மூன்று தூண்களான சட்டமன்றம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் சமநிலை இப்போது முற்றிலும் சீர்குலைந்துள்ளது என்றார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதப்படுத்த சதி செய்து வந்ததாகக் குறிப்பிட்ட அவர், பாராளுமன்ற சிறப்புரிமைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் நீதிமன்றத் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி தற்போது சட்டமன்றமும் தேர்தலை தாமதப்படுத்தச் செயல்படுவதாக குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...