153224 strike
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டின் இன்றைய நிலைக்குக் காரணமானவர்கள் பதவி விலகுவதே சிறந்தது! – ஹர்த்தாலுக்கு இ.த.ஆ.சங்கம் பூரண ஆதரவு

Share

நாட்டின் இன்றைய நிலைக்கு காரணமானவர்கள் பதவிவிலக வேண்டுமென்பதே நாட்டில் உள்ள பெருபான்மையானோரின் கோரிக்கை.

இந்தக் கோரிக்கையை ஏற்று தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் என நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்து, நாளையதினம் (28.04.2022) பணிப்பகிஸ்கரிப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனை அனைவரும் ஏற்று பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடுமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், இதைவிட ஒட்டு மொத்த மக்களையும் இணைத்து ஆட்சியாளர்களுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்த எதிர்வரும் 06.05.2020 (வெள்ளிக்கிழமை) நடைபெறும் பொதுக் ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த இரண்டு நாட்களும் அதிபர்கள், ஆசிரியர்கள் கடமைக்குச் செல்லாது. அதிபர்கள் கல்வித் திணைக்களத்திற்கும், ஆசியர்கள் அதிபர்களுக்கும் தமது விடுமுறையை அறிவிக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம் – எனவும் தெரிவித்துள்ளது.

இனி வரும் காலங்களில் பாடசாலை மாணவர்களுக்கு தீங்கு ஏற்படாத வகையில் எமது போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்றும் போராட்ட வடிவம் மாற்றப்பட வேண்டும் என்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பிடம் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...