16 5
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியை சிரமத்திற்கு உள்ளாக்கிய கடவுச்சீட்டு விவகாரம்!

Share

ஜனாதிபதியை சிரமத்திற்கு உள்ளாக்கிய கடவுச்சீட்டு விவகாரம்!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள(Department of Immigration and Emigration) உயர் நிர்வாகம் வழங்கிய தவறான தகவல்களே மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை சிரமத்திற்கு உள்ளாக்கியதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட விசேட அறிக்கையில் இந்த விடயம ்தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய உண்மை நிலையை காட்டுவதற்கும், நெருக்கடிக்கு தீர்வு காண எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கும் வகையில் அறிக்கை வெளியிடப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரவுகளையும் தகவல்களையும் திணைக்களம் கொண்டிருந்தாலும், அது அரசாங்கத்தின் முழுப் பங்கில் மூன்றில் ஒரு பங்கை உள்ளடக்கிய மிகவும் பொறுப்பான பாத்திரத்தில் ஈடுபட்டுள்ள விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு எவ்வளவு கடுமையாக இருந்தாலும் திணைக்கள அதிகாரிகளால் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவது தொடர்பாக உண்மையான நிலைமை வெளிப்படுத்தாமை வருத்தமளிக்கிறது என்றும் இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கம் கூறுகிறது.

பழைய அரசியல் அதிகாரத்தின் விசுவாசத்தின் அடிப்படையில் பதவிகளைப் பெற்ற சில உயர்மட்ட நபர்களின் தன்னிச்சையான செயற்பாடுகளை பேணுவதன் மூலம் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்களை சிரமத்திற்கு உள்ளாக்கிய இதுபோன்ற அதிகாரிகள் யார் என்பதை வெளிப்படுத்துவது சங்கத்தின் பொறுப்பாகும் எனவும், அதற்காக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்க இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கம் நடவடிக்கை எடுத்த நிலையில், வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு திணைக்கள அதிகாரிகளிடம் வலியுறுத்துவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...