28 6
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டுகளுக்கான நெருக்கடி: குடிவரவு கட்டுப்பாட்டாளர் போலந்து பயணம்

Share

கடவுச்சீட்டுகளுக்கான நெருக்கடி: குடிவரவு கட்டுப்பாட்டாளர் போலந்து பயணம்

கடவுச்சீட்டுக்களுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குடிவரவு கட்டுப்பாட்டாளர் மற்றும் துணைக் கட்டுப்பாட்டாளர் ஆகியோர் கடவுச்சீட்டுக்களை தயாரிக்கும் போலந்து நிறுவனத்துடன் பேச்சு நடத்துவதற்காக அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடவுச்சீட்டுக்களின் தயாரிப்பை துரிதப்படுத்துவதற்காகவே அவர்கள் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய இணையக்கடவுச்சீட்டுக்களை தயாரிக்கும் பொறுப்பு எம்ஆர்பிகள் தேல்ஸ் டிஐஎஸ் ஃபின்லாந்து ( Thales DIS Finland Oy)என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த தயாரிப்புக்கள் கால தாமதமாவதால், இலங்கையில் கடவுச்சீட்டு விநியோகத்தில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

வெற்றுக்கடவுச்சீட்டுகள் இல்லாமையே இந்த நிலைமைக்கான காரணமாகும்.

இந்தநிலையில் புதிய இ-கடவுச்சீட்டுகள் 2024 அக்டோபர் மாத இறுதியில் இலங்கைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அவை ஏற்கனவே பயன்படுத்தப்படும் கடவுச்சீட்டுக்களில் இருந்து வித்தியாசமாக இருக்கும் மற்றும் பிற பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...