ஐ.பி.எல் 2025 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி நாளையதினம்(03.06.2025) நடைபெறவுள்ளது.
இந்தியாவின், அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், இந்திய நேரப்படி இரவு 7:30 க்கு இந்தப்போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இந்த இறுதிப்போட்டியில் பெங்களுர் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
முன்னதாக முதலாவது அரையிறுதிப்போட்டியில், வெற்றி கொண்ட பெங்களூர் அணி, இறுதிப்போட்டிக்கு தெரிவானது.
இதனையடுத்து நேற்று மும்பாய் அணியுடனான அரையிறுதியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்கான இரண்டாவது அணியாக தெரிவாகியுள்ளது.