sajith 3 2
அரசியல்இலங்கைசெய்திகள்

உட்கட்சி மோதல் உக்கிரம்!

Share

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்குள் உட்கட்சி மோதல் உக்கிரமடைய ஆரம்பித்துள்ளது.

பிரதமர் பதவியை சஜித் பிரேமதாச ஏற்காததால் அதிருப்தியடைந்த ஹரின் பெர்ணான்டோ, மனுச நாணயக்கார , வடிவேல் சுரேஷ் ஆகியோர் கட்சியிலிருந்து விலகி, அரசுடன் இணைந்து அமைச்சு பதவியை ஏற்றுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக, எதிர்கால அரசியல் பயணத்தை தொடரவும் திட்டமிட்டுள்ளனர்.

கருஜயசூரியவை தேசியப்பட்டியல் எம்.பியாக்கி, அவருக்கு பிரதமர் பதவியை வழங்கலாம் என கபீர் ஹாசீம் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் யோசனை முன்வைத்துள்ளனர். இதற்காக தனது தேசியப்பட்டியல் எம்.பி. பதவியை விட்டுக்கொடுக்க ,மயந்த திஸாநாயக்க தயாராகவே இருந்துள்ளார். இந்த முயற்சி வெற்றியளிக்காததால் கபீர் ஹாசீம் உள்ளிட்ட தரப்பும் மனமுடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.

சரத்பொன்சேகா, ராஜித சேனாரத்ன போன்றவர்கள் சஜித்தை தவறாக வழிநடத்துகின்றனர் என மேலும் சில உறுப்பினர்கள், தமது சகாக்களிடம் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...