Lotus Tower
இலங்கைசெய்திகள்

தாமரைக் கோபுரத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள்!

Share

தேசிய சர்வதேச முதலீட்டாளர்கள் இதில் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதுடன் 22 முதலீட்டாளர்கள் உடன்படிக்கையை மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தாமரைக் கோபுரம் தனியார் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இவ் வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை 15 உற்சவங்களை நடத்துவதற்கான ஒப்பந்தம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாமரைக்கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இந்த வருடம் பெப்ரவரி 28 ஆம் திகதி நிர்மாணப் பணிகள் முடிவடைந்தது. சீன நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள கடன் நிதியை 2024 ஆம் ஆண்டுக்குள் மீளச் செலுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று உத்தியோகபூர்வமாக செயற்பாடுகளை ஆரம்பிக்கும் தாமரைக் கோரத்தை பார்வையிடுவதற்கு 500 ரூபா மற்றும் 2,000 ரூபா பிரவேசச் சீட்டுக்களை பெற்று அதனைப் பார்வையிடமுடியும் என்றும் வெளிநாட்டவர் 20 டொலரை கட்டணமாக செலுத்தி அதனைப் பார்வையிட முடியுமென்று அவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...