Lotus Tower
இலங்கைசெய்திகள்

தாமரைக் கோபுரத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள்!

Share

தேசிய சர்வதேச முதலீட்டாளர்கள் இதில் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதுடன் 22 முதலீட்டாளர்கள் உடன்படிக்கையை மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தாமரைக் கோபுரம் தனியார் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இவ் வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை 15 உற்சவங்களை நடத்துவதற்கான ஒப்பந்தம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாமரைக்கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இந்த வருடம் பெப்ரவரி 28 ஆம் திகதி நிர்மாணப் பணிகள் முடிவடைந்தது. சீன நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள கடன் நிதியை 2024 ஆம் ஆண்டுக்குள் மீளச் செலுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று உத்தியோகபூர்வமாக செயற்பாடுகளை ஆரம்பிக்கும் தாமரைக் கோரத்தை பார்வையிடுவதற்கு 500 ரூபா மற்றும் 2,000 ரூபா பிரவேசச் சீட்டுக்களை பெற்று அதனைப் பார்வையிடமுடியும் என்றும் வெளிநாட்டவர் 20 டொலரை கட்டணமாக செலுத்தி அதனைப் பார்வையிட முடியுமென்று அவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...