21 17
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சர்வதேச நிபுணர்

Share

இலங்கையில் பாலியல் வன்கொடுமை என்பது, அடிக்கடி பதிவாகும் குற்றமாக மாறியுள்ளது.

2024 ஆம் ஆண்டில் மட்டும் இலங்கையில் 2,252 பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களும், 130,000 வீட்டு குடும்ப வன்முறை சம்பவங்களும்பதிவாகியுள்ளன.

இது கொரோனாவுக்கு முந்திய ஆண்டுகளை விட குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இலங்கையில், குறித்த குற்றங்களின் தீவிரத்தை கட்டுப்படுத்த கனேடிய அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும், ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நீதியை உறுதி செய்யும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின் ஊடாக மரபணு பகுப்பாய்வில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிபுணர் ஒருவர் 4 மாத காலத்துக்கு இலங்கையில் அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
கைக்குண்டுகள்
இலங்கை

இரத்மலானை பகுதியில் வீட்டின் மேல் வீசப்பட்ட கைக்குண்டுகள்.

இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...