யாழிலிருந்து 'சரிகமப' நிகழ்ச்சிக்கு தெரிவான கில்மிசா பற்றி வெளியான சுவாரஸ்ய தகவல்கள்..!
இலங்கைசினிமாசெய்திகள்

யாழிலிருந்து ‘சரிகமப’ நிகழ்ச்சிக்கு தெரிவான கில்மிசா பற்றி வெளியான சுவாரஸ்ய தகவல்கள்..!

Share

யாழிலிருந்து ‘சரிகமப’ நிகழ்ச்சிக்கு தெரிவான கில்மிசா பற்றி வெளியான சுவாரஸ்ய தகவல்கள்..!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான ஷு தமிழில் அண்மையில் ‘சரிகமப’ நிகழ்ச்சிக்கான ஆடிஷன் நடந்தது. இதில் பல போட்டியாளர்கள் தமது குரல் வளத்தை வெளிப்படுத்தி நடுவர்களைக் கவர்ந்ததோடு செலக்ட் ஆனார்கள்.

அவர்கள் வரிசையில் அனைத்து நடுவர்களின் விருப்பத்திற்குரிய பாடகியாக தேர்வாகியவர் தான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிசா. இவரது குரலைக் கேட்டு நடுவர்களே அசந்து போனதோடு தற்பொழுது ட்ரெண்டிங் பாடகியாகவும் கில்மிசா இருக்கின்றார்.

இவர் தற்பொழுது கில்மிசா என்ற யூடியூப் சேனலையும் ஆரம்பித்துள்ளார். இது ஒரு புறம் இருக்க இவர் பற்றிய அறியாத தகவல்களாக பின்வருவனவற்றைக் கூறலாம்.

கில்மிசா யாழ்ப்பாணத்தில் இருப்பதோடு தரம் 8ம் வகுப்பில் கல்வி கற்று வருகின்றாராம். தன்னுடைய மூன்று வயதில் இருந்த பாட ஆரம்பித்த இவர் ஆரம்பத்தில் கோயில்களில் பஜனைப் பாடல்களை மாத்திரமே பாடி வந்தாராம். பின்னர் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடல் மூலம் தான் பாடகியாக மாறினாராம்.

இவர் சாரங்கா இசைக்குழு என்ற குழுவுடன் சேர்ந்து பல இசைக் கச்சேரிகளில் படி இருக்கின்றாராம்.

இது தவிர இந்தியப் பாடகர்களான ரமணியம்மா, அஜய் கிருஷ்ணா, வர்ஷா ஆகியோருடனும் சேர்ந்து யாழ்ப்பாணத்தில் பாடி இருக்கின்றாராம். அத்தோடு பல விருதுகளையும் பெற்றிருக்கின்றாரம்.

மேலும் யாழ்ப்பாணத்தில் நடந்த இசைக்கச்சேரிக்கு சரிகமப குழு வந்திருந்தார்களாம். அவர்கள் தான் கில்மிசாவின் குரலைக் கேட்டு சரிகமப நிகழ்ச்சியில் பாடுவதற்கு வாய்ப்பினை வாங்கிக் கொடுத்தார்களாம். கில்மிசாவுக்கு டாக்டர் ஆக வேண்டும் என்பது தான் கனவாம். அவர் பாடகியாகவும் இருந்து கொண்டு டாக்டராகவும் வருவேன் என்று தெரிவித்துள்ளார்.

அத்தோடு இவருக்கு நடனம் நடிப்பு எல்லாக் கலையும் தெரியுமாம். கலையுலகில் ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக இவருடைய குடும்பமும் இவருக்கு முழு ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 6719ef7b673a7
அரசியல்செய்திகள்

டயானா கமகே கடவுச்சீட்டு விசா வழக்கு: மேலதிக சாட்சியங்களுக்காக பிப். 16க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத்...

25 68c5459f4b9b5
சினிமாபொழுதுபோக்கு

காதல் வதந்திகள் குறித்து மிருணாள் தாகூர் கருத்து: அது எனக்கு இலவச விளம்பரம், சிரிப்புதான் வருகிறது!

இந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை மிருணாள் தாகூர் (Mrunal Thakur),...

sk4
சினிமாபொழுதுபோக்கு

சமூக வலைதளங்களைப் பார்த்தால் பயம் வருகிறது – சிவகார்த்திகேயன் பேச்சு!

சமூக வலைதளங்களைப் (Social Media) பார்த்தால் தற்போது அனைவருக்கும் பயம் வருகிறது என்று நடிகர் சிவகார்த்திகேயன்...

Waqf Board Donates Rs 10 Million 1170x658 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் சேதமடைந்த மதத் தலங்களைப் புனரமைக்க: வக்ஃப் சபை 10 மில்லியன் நிதி நன்கொடை!

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால்...