19 13
இலங்கைசெய்திகள்

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட கணக்குகள் குறித்து பொலிஸார் வெளியிட்ட எச்சரிக்கை

Share

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட கணக்குகள் குறித்து பொலிஸார் வெளியிட்ட எச்சரிக்கை

இலங்கையில் அதிகரித்து வரும் இணைய மோசடிகளுக்கு மத்தியில், மோசடிகளில் ஈடுபடுபவர்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட கணக்குகளில் மட்டுமே ஊடுருவல் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் வங்கி அமைப்புகள் அல்லது நிதி நிறுவனங்களின் கணக்குகளில் ஊடுருவல் செய்த சம்பவங்கள் இலங்கையில் அல்லது உலகில் எங்கும் பதிவாகவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ இது தொடர்பில் வெளியிட்டுள்ள தகவலில், பலரின் தனிப்பட்ட கணக்குகளில் ஊடுருவல் செய்து, பல மில்லியன் ரூபாய்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

முன்னணி தனியார் வங்கியொன்றின் தனிப்பட்ட கணக்கு அண்மையில் ஊடுருவப்பட்டு சுமார் 80 மில்லியன் ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

வங்கிக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் தங்கள் பொறுப்பற்ற நடத்தை மற்றும் அலட்சியத்தால் இந்த மோசடிகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.

இந்தநிலையில்; மோசடியால் சிக்கிக்கொள்ளும் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏற்படும் நிதி இழப்புகளின்போது, வங்கிகளுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்றும் தல்துவ தெரிவித்துள்ளார்.

வாராந்தர அமைச்சரவை மாநாட்டில் நேற்று பங்கேற்ற அவர், கைப்பேசிகள் மற்றும் 250 மடிக்கணணிகளை கைப்பற்றி சீனர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோசடி செய்பவர்கள் விருந்தகங்களில் மற்றும் வீடுகளில் தங்கியிருந்ததாக கூறிய அவர், தங்களுடைய வளாகத்தை வாடகைக்கு விடுபவர்கள் தங்கள் வளாகங்களில் மோசடிகள் நடப்பதை அறிந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்

இந்த மோசடி செய்பவர்கள் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் கணக்குகளில் ஊடுருவி கிரிப்டோ கரன்சியாக இலட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றுகிறார்கள் என்று பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...