1671192809 s 01
இந்தியாஇலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் படகு தொடர்பில் கிடைத்த தகவல்!

Share

பாரியளவான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடற்படையினர் நேற்று (14) தென் கடலில் வைத்து கைப்பற்றியிருந்தனர்.

இலங்கை கடற்படை, அரச புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

1671192809 s 02

இலங்கையின் தெற்கே ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட நடவடிக்கையில், பெருமளவிலான ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இலங்கையின் இரண்டு பல நாள் மீன்பிடி படகுகளுடன் இலங்கையை சேர்ந்த சந்தேகநபர்கள் குழுவொன்றும் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையின் தெற்கே கடற்பகுதியில் பல நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடற்படைக் கப்பலான சமுதுரவுக்கு இது தொடர்பில் தகவல் கிடைத்திருந்தது.

1671192809 s 03

அதன்படி, தேவேந்திரமுனைக்கு அப்பால் ஆழ்கடலில் பயணித்துக் கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான பல நாள் மீன்பிடிக் கப்பல் அவதானிக்கப்பட்டது..

கப்பலை சோதனையிட்ட பின்னர் 200 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஐஸ் போதைப்பொருள், சந்தேகநபர்களை கைது செய்ய முடிந்துள்ளது.

மேலும், சமுதுர கப்பலினால் கைது செய்யப்பட்ட பல நாள் மீன்பிடி கப்பலுக்கு எரிபொருள் விநியோகிக்க வந்த இந்நாட்டின் மற்றுமொரு பல நாள் மீன்பிடி கப்பலுடன் 06 சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

1671192809 s 04

1671192810 s 06

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...