tamilni 282 scaled
இலங்கைசெய்திகள்

அநுராதபுரத்தில் பணம் பறிக்கும் கும்பல்

Share

அநுராதபுரத்தில் பணம் பறிக்கும் கும்பல்

அநுராதபுரம் – மரதன்கட, கணேவல்பொல நகரில் உள்ள கடைகளில் பணம் பறிக்கும் கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதியில் உள்ள கடையொன்றில், இரகசிய கண்காணிப்பு கருவியில் சந்தேகத்திற்கு இடமான கும்பலின் பணம்பறிக்கும் செயற்பாடு பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், காலை 11.00 மணியளவில் கடைக்கு வந்த நபர் ஒருவர் தொலைபேசி வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்து சென்றுள்ளார்.

இதன்பின்னர், ஒன்றரை மணி நேரம் கழித்து கடைக்குள் நுழைந்த கும்பல், பணத்தை மாற்றிக் கொடுத்தவர் போதைப்பொருள் வியாபாரி என்று கூறி தொலைபேசி கடையின் உரிமையாளரை மிரட்டியுள்ளனர்.

பின்னர் சம்பவம் பதிவாகாமல் இருக்க கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிரீவி கேமரா அமைப்பை செயலிழக்க வைக்குமாறு கடை உரிமையாளருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், இது தொடர்பான போதைப்பொருள் கடத்தலில் கடை உரிமையாளருக்கும் தொடர்பு இருப்பதாகவும், இந்நிலையில் அவரிடம் 6,000 ரூபாய் தருமாறும் உரிமையாளரை மிரட்டியுள்ளனர்.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...