555
இலங்கைசெய்திகள்

வீடு புகுந்து தாக்குதல்! – அடம்பனில் சம்பவம்

Share

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட விடத்தல் தீவு, 5 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 15 பேர் கொண்ட குழு ஒன்று வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

நேற்று மாலை 6.30 மணியளவில் மதுபோதையில் அத்துமீறி நுழைந்த சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் குறித்த வீட்டில் உள்ளவர் அனைவரையும் சரமாரியாகத் தாக்கி தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் வீட்டின் உரிமையாளர் அன்டரி ஜோசப் (வயது–44) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் அருகில் உள்ள பள்ளமடு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வீட்டிலுள்ள 18 வயதுடைய இதயநோய் உள்ள பெண் ஒருவரும் 15 வயதுடைய சிறுமியும் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அடம்பன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...