555
இலங்கைசெய்திகள்

வீடு புகுந்து தாக்குதல்! – அடம்பனில் சம்பவம்

Share

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட விடத்தல் தீவு, 5 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 15 பேர் கொண்ட குழு ஒன்று வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

நேற்று மாலை 6.30 மணியளவில் மதுபோதையில் அத்துமீறி நுழைந்த சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் குறித்த வீட்டில் உள்ளவர் அனைவரையும் சரமாரியாகத் தாக்கி தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் வீட்டின் உரிமையாளர் அன்டரி ஜோசப் (வயது–44) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் அருகில் உள்ள பள்ளமடு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வீட்டிலுள்ள 18 வயதுடைய இதயநோய் உள்ள பெண் ஒருவரும் 15 வயதுடைய சிறுமியும் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அடம்பன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
articles2Fka10y8tLGVxpVydY2Opn
செய்திகள்உலகம்

பிரித்தானிய நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்டம்: பங்குச் சந்தை முதலீட்டை ஊக்குவிக்கச் சேமிப்புக் கணக்கு வரம்பு குறைய வாய்ப்பு!

பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) நாளைய தினம் (நவம்பர் 26) தனது வருடாந்தர...

articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...