இலங்கையில், இந்தியா- தமிழகத்தின் அரசி வகைகள் ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்திலிருந்து இறக்குமதியான அரிசி வகைகள் உள்நாட்டு அரிசி விலைகளை விடவும் குறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இரசாயன உரப் பயன்பாட்டுக்கு அரசாங்கம் தடை விதித்தமையால், இம்முறை நெல் விளைச்சலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக உள்நாட்டு அரிசி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ள நிலையல், தமிழக அரிசி வகைகள் இயற்கை உரத்தை கொண்டு உற்பத்தி செய்யப்பட்டவையா என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், தமிழக அரிசிகள் இலங்கையை ஆக்கிரமித்துள்ளதாக கூறபடுகிறது.
#SrilankaNews