9 2 1
இலங்கைசெய்திகள்

இலங்கையின் அரசியல் அதிர்ச்சிக்கான காரணங்களை கூறிய இந்திய வெளியுறவு அமைச்சர்

Share

இலங்கையின் அரசியல் அதிர்ச்சிக்கான காரணங்களை கூறிய இந்திய வெளியுறவு அமைச்சர்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கை முகங்கொடுக்க நேர்ந்த அரசியல் அதிர்ச்சி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு காரணிகளின் விளைவு என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அமைதிக்கான அமெரிக்க சிந்தனைக் குழுவான கார்னகி எண்டோவ்மென்ட்;( Carnegie Endowmen) ஏற்பாடு செய்த கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உலகின் குறிப்பிட்ட பிராந்தியத்தில் ஏற்படும் மோதல்கள் உலகின் பிற பிராந்தியங்களில், குறிப்பாக தெற்கில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் இலங்கையிலும் இந்த காரணிகளின் விளைவாகவே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் அரசியல் அதிர்ச்சி ஏற்பட்டதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனிலும், மத்திய கிழக்கிலும் இடம்பெறும் மோதல்கள் காரணமாக உலகளாவிய பதற்றநிலை தோற்றம் பெற்றதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....