Douglas
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

இந்திய மீனவர்களின் படகு இரணைதீவு மக்களுக்கு! – டக்ளஸ் தேவானந்தா

Share

இரணைதீவு மக்களின் போக்குவரத்து தேவைக்காக அண்மையில் இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகொன்றை கையளிக்க உள்ளோமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கத்தின் தெரிவு இடம்பெற்ற நிலையில் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மயிலிட்டியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளின் நிலையை நாம் பார்வையிட்டோம். இரணைதீவு மக்களின் போக்குவரத்து தேவைக்காக அண்மையில் இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகொன்றை கையளிக்க உள்ளோம்.

இந்தியாவில் இருந்து அழுத்தங்கள் வந்தாலும் இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் தற்போது அரசுடமையாக்கப்பட்டுள்ளன.

நாம் நல்லெண்ணத்தை காட்டி இந்திய மீனவர்களை விடுதலை செய்த பொழுதும் இலங்கை மீனவர்கள் இன்றும் இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசு நீதிமன்ற நடவடிக்கையை காரணம் காட்டி செயல்படும் பொழுது நாமும் நீதிமன்ற பொறிமுறை ஊடாகவே செல்ல முடியும் – என்றார்.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...