1 1
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தின் 3 தீவுகளையும் சீனாவிடமிருந்து பிடுங்கியது இந்தியா!

Share

யாழ்ப்பாணத்தின் 3 தீவுகளில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலமான மின் உற்பத்தி தொடர்பில் இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்தத் தீவுகளில் சீன அரசின் உதவியுடன் அந்த நாட்டு நிறுவனம் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலமான மின் உற்பத்தி மேற்கொள்வதற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. இந்தியா தனது பாதுகாப்பை முன்னிறுத்தி இராதந்திர ரீதியில் இலங்கைக்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

இந்தநிலையில் இலங்கைக்கான ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கலின்போது இந்தியா பல நிபந்தனைகளை விதித்திருந்தது. அதில் வடக்கு, கிழக்கில் இந்திய முதலீட்டுக்கு அனுமதிக்கக் கோரியிருந்தது.
இதற்கு அமைவாக யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளிலும் மின் உற்பத்திக்கான ஒப்பந்தம் இந்தியாவுடன் நேற்றுமுன்தினம் இரவு கைச்சாத்திடப்பட்டுள்ளது.

“பொருளாதார மீட்சி, நமது அபிவிருத்தி பங்குடைமை, பரஸ்பர பாதுகாப்பு, மீனவர்கள் விவகாரம் மற்றும் சர்வதேச ரீதியிலான ஒன்றிணைவு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் முக்கியமான பல உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்ட நிகழ்வுகளிலும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது” என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடனான சந்திப்பின் பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....