2 4
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர் ஏற்பட்டால் இலங்கைக்கு பாதிப்பு கிடையாது

Share

இந்திய – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் போர் ஏற்பட்டால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் ஏதேனும் ஓர் வகையில் போர் மூண்டால் அது இலங்கைக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் யுத்தம் நடந்தாலும் அது இலங்கையின் பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்தப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக அரங்கில் போர் பலம் கொண்ட இரண்டு முக்கிய நாடுகளாக இந்தியாவையும் பாகிஸ்தானையும் கருத முடியும் எனவும் அந்த வகையில் ஒப்பீட்டால் இலங்கை ஒர் நெத்தலி போன்றதொரு சிறியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது நாட்டு மக்கள் மிகவும் சிரமப்பட்டு உணவு உட்கொண்டு வாழ்க்கையை முன்னெடுப்பதாகவும், இந்திய பாகிஸ்தான் போர் மூண்டால் அதனால் இலங்கை மக்கள் இழப்பதற்கு விசேடமாக ஏதுவுமில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
04 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க விசேட பொறிமுறை: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு உரை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விநியோகத் தடைகளை எதிர்கொள்ள இலங்கை...

03 18
செய்திகள்உலகம்

‘சேவ் அமெரிக்கா’ சட்டமூலம்: ஆதரவளிக்காத செனட்டர்களுக்கு டொனால்டு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் தீர்மானமிக்க சட்டமூலமாக அமையவுள்ள ‘சேவ் அமெரிக்கா’ (Save America Act) சட்டமூலத்திற்கு...

02 17
செய்திகள்உலகம்

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் இராஜினாமா: ஈரான் போர் குறித்து ட்ரம்பிற்குப் பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள ஜோசப் கென்ட்,...

01 17
செய்திகள்விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் வீரர்களைக் கௌரவிக்கின்றது: ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியுடன் ஒன்றுகூடல்

இந்தியப் பிரீமியர் லீக் (IPL) 2026 தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)...