27 5
இலங்கைசெய்திகள்

தீவிரம் அடையும் இந்தியா – பாகிஸ்தான் போர்: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அதிரடி நடவடிக்கை

Share

இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாகூர் நகரங்களுக்கான விமானங்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ரத்து செய்துள்ளது.

எதிர்காலத்தில் சர்வதேச விமானங்களுக்கு கராச்சி மற்றும் லாகூரின் விமான நிலையங்கள் திறக்கப்பட்டவுடன், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த பின்னர் மீண்டும் சேவையை முன்னெடுப்போம் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் வாரத்திற்கு சராசரியாக 8 விமான சேவைகளை பாகிஸ்தானுக்கு மேற்கொள்கிறது.

பாகிஸ்தானின் லாகூர் மற்றும் கராச்சிக்கு தலா 4 விமான சேவைகள் முன்னெடுப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் பிராந்திய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் இலங்கை அரசாங்கமும் விமான நிறுவனமும் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயணிகளின் பாதுகாப்பை முதன்மையான முன்னுரிமையாக கொண்டு மேலும் நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...