24 664464d453305
இலங்கைசெய்திகள்

இந்தியாவின் அறிவிப்பு: இலங்கைக்கு சாதகமாகியுள்ளதாக தகவல்

Share

இந்தியாவின் அறிவிப்பு: இலங்கைக்கு சாதகமாகியுள்ளதாக தகவல்

மாலைதீவைப் (Maildives) புறக்கணிக்குமாறு இந்தியப் பயணிகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு இலங்கையின் பயணத் துறைக்கு முற்றிலும் சாதகமாகியுள்ளதாக இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) இந்திய ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

2023இல் மாலைதீவின் மிகப்பெரிய மூலச் சந்தையாக இந்தியா (India) விளங்கியுள்ளது.

எனினும் தற்போது சீனா, ரஸ்யா, ஐக்கிய இராச்சியம், இத்தாலி மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் வருகையை விட ஆறாவதாக குறைந்த எண்ணிக்கையிலேயே இந்திய பயணிகள் மாலைதீவுக்கு செல்கின்றனர்.

இலங்கைக்கு ஏறக்குறைய 34,400 இந்தியப் பயணிகள் கடந்த ஜனவரியில் வருகை தந்துள்ளனர்.

இது கடந்த ஆண்டு ஜனவரியில் வந்த 13,759 பேரை விட இரண்டு மடங்கு அதிகமாகும் என்று இலங்கை சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வருகைகள் 2023ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியை விட அதிகமாக இருந்துள்ளது.

இந்நிலையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மட்டும் வாரத்திற்கு 80 முறை இந்திய விமான நிலையங்களுக்குள் பயணங்களை மேற்கொள்வதாக ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பயணிகள் 2030ஆம் ஆண்டளவில் உலகின் நான்காவது பெரிய பயணச் செலவு செய்பவர்களாக மாற உள்ளனர்.இது இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு முற்றிலும் நல்லதொரு முன்னறிவிப்பு.

மேலும், இந்தியாவில் வேகமாக பொருளாதாரம் வளர்ந்து வருகிறது இதன் மூலம் இலங்கை நிச்சயமாக பயனடைகிறது.

இந்திய நிறுவனங்கள் தீவில் கணிசமான முதலீடுகளைச் செய்யவுள்ளதோடு ஐடிசி போன்ற இந்தியாவிற்கு வெளியே தங்கள் முதல் ஹோட்டலை இலங்கையில் திறந்துள்ளது என்றும் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...