பிஸ்கட்டுகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.
பிஸ்கட்டு உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் விசேட கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக பிஸ்கட்டுக்களின் விலைகளை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக இலங்கை இனிப்பு பண்டங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் பல சந்தர்ப்பங்களில் உற்பத்தி மூலப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.
இந்நிலையில் உற்பத்தி பொருட்களுக்காக பயன்படுத்தப்படும் கோதுமை மாவின் விலையும் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பிஸ்கட்டுகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளது என இலங்கை இனிப்பு பண்டங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment