இறக்குமதி செய்யப்படும் முட்டை தொடர்பில் அறிவித்தல்
இலங்கைசெய்திகள்

இறக்குமதி செய்யப்படும் முட்டை தொடர்பில் அறிவித்தல்

Share

இறக்குமதி செய்யப்படும் முட்டை தொடர்பில் அறிவித்தல்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து முட்டைகளையும் வெளிச்சந்தையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தகவலின் படி , நாளொன்றுக்கு சுமார் ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது..

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

மேலும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் சதொச விற்பனை நிலையங்களில் அடுத்த வாரம் முதல் முட்டை ஒன்று 42 ரூபாவிற்கு பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதன்படி இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை ஹோட்டல் மற்றும் பேக்கரிகளுக்கு விற்பனை செய்யும் திட்டம் நிறுத்தப்படும் என்று அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் மேலும், தெரிவித்துள்ளது.

உள்நாட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய இந்த ஆண்டு தொடக்கத்தில் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...