1 24
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் பெருந்தொகை சம்பளத்துடன் வேலைவாய்ப்பு: வெளியான அறிவிப்பு

Share

வெளிநாட்டில் பெருந்தொகை சம்பளத்துடன் வேலைவாய்ப்பு: வெளியான அறிவிப்பு

இஸ்ரேலில் நிர்மாணத் துறையில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஆட்சேர்ப்புக்கான முன்னோடி பரீட்சைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதுவரை1500 இற்கும் அதிகமானோர் தொழில்களில் இணைந்து சம்பளம் பெறவுள்ளதாகவும், பரீட்சைகளுக்காக ஏற்கனவே பெருமளவானோர் வருகை தருவதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, கட்டுமானத்துறையில் 25-44 வயதுக்குட்பட்ட அனுபவமுள்ள ஆண் தொழிலாளர்கள் பரீட்சைகளில் நேரடியாக பங்குபற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வேலைகள் தொடர்பான நேர்முக பரீட்சை ஆகஸ்ட் 15 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8.00 மணி முதல் மொரட்டுவ கடுபெத்தவில் உள்ள NAITA இன்ஸ்டிட்யூட்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரீட்சை நுழைவுக்கட்டணமாக 6000 ரூபாய் அறவிடப்படும் எனவும், விண்ணப்பிக்க விரும்புவோர் தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்கள், கடவுச்சீட்டுடன் வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Shooting
இலங்கை

சற்றுமுன் கட்டுநாயக்கவில் துப்பாக்கிச்சூடு.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இன்று பிற்பகல் வேளை, கட்டுநாயக்க – தேவமொட்டாவ பகுதியில் உள்ள...

பேராசிரியர் சரத் அபேகோன்
இலங்கை

ஜனாதிபதிக்கு பறந்த பதவி விலகல் கடிதம்.

தமது பதவியிலிருந்து விலகுவதாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பதவி விலகல் குறித்த...

are 2
இலங்கை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது...

j poretest d
இலங்கை

மாநகர சபைக்குள் நுழைய வேண்டிய நிலை உருவாகும் – அதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுங்கள்!

யாழ்ப்பாணம் – காக்கை தீவு மக்கள் மாநகர சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு...