24 663c1a49940f7
இலங்கைசெய்திகள்

போலி நாணயத்தாள்கள் குறித்து எச்சரிக்கை

Share

போலி நாணயத்தாள்கள் குறித்து எச்சரிக்கை

ஜனவரி 1, 2023 மற்றும் டிசம்பர் 25, 2023 க்கு இடையில் 1,769 போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இலங்கை மத்திய வங்கியின் நிதி அறிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு மே மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்ட 1,769 போலி நாணயத்தாள்கள் 11 நீதிமன்ற வழக்குகளுக்காக இலங்கை மத்திய வங்கி நீதி அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளது.

இலங்கையில் ஒரு மில்லியன் நாணயத் தாள்களுக்கு சுமார் 1.4 போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் உள்ளதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இது ஒரு மில்லியன் நாணயத் தாள்களுக்கு 15 போலி நாணயத் தாள்கள் என்ற உலகளாவிய சராசரி வீதத்துடன் ஒப்பிடும் போது கணிசமான குறைவாகும்.

இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 57 ஆவது பிரிவின் கீழ், நீதித்துறை நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில், போலி நாணயத் தாள்களைப் பின்பற்றுவது தொடர்பான தீர்க்கமான ஆதாரமாக மத்திய வங்கி 97 சான்றிதழ்களை வழங்கியுள்ளது.

இதற்கு மேலதிகமாக, புழக்கத்தில் உள்ள பணத்தின் தரத்தை பேணுவதற்காக போலி நாணயத்தாள்களை கண்டறிவது பற்றிய அறிவை மேம்படுத்தும் வகையில், இலங்கை மத்திய வங்கி இதுவரை பொது மக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களுக்கு சுமார் 25 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...