24 663c1a49940f7
இலங்கைசெய்திகள்

போலி நாணயத்தாள்கள் குறித்து எச்சரிக்கை

Share

போலி நாணயத்தாள்கள் குறித்து எச்சரிக்கை

ஜனவரி 1, 2023 மற்றும் டிசம்பர் 25, 2023 க்கு இடையில் 1,769 போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இலங்கை மத்திய வங்கியின் நிதி அறிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு மே மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்ட 1,769 போலி நாணயத்தாள்கள் 11 நீதிமன்ற வழக்குகளுக்காக இலங்கை மத்திய வங்கி நீதி அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளது.

இலங்கையில் ஒரு மில்லியன் நாணயத் தாள்களுக்கு சுமார் 1.4 போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் உள்ளதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இது ஒரு மில்லியன் நாணயத் தாள்களுக்கு 15 போலி நாணயத் தாள்கள் என்ற உலகளாவிய சராசரி வீதத்துடன் ஒப்பிடும் போது கணிசமான குறைவாகும்.

இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 57 ஆவது பிரிவின் கீழ், நீதித்துறை நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில், போலி நாணயத் தாள்களைப் பின்பற்றுவது தொடர்பான தீர்க்கமான ஆதாரமாக மத்திய வங்கி 97 சான்றிதழ்களை வழங்கியுள்ளது.

இதற்கு மேலதிகமாக, புழக்கத்தில் உள்ள பணத்தின் தரத்தை பேணுவதற்காக போலி நாணயத்தாள்களை கண்டறிவது பற்றிய அறிவை மேம்படுத்தும் வகையில், இலங்கை மத்திய வங்கி இதுவரை பொது மக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களுக்கு சுமார் 25 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...