9 4
இலங்கைசெய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவுறுத்தல்

Share

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவுறுத்தல்

ஜனாதிபதி தேர்தலுக்கு தேவையான தகைமைகளை பூர்த்தி செய்யாதவர்கள் கட்டுப்பணத்தை செலுத்தும் சூழ்நிலை தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் மூலம் விளம்பரம் பெறும் நோக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவ்வாறு பலர் கட்டுப்பணத்தை செலுத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எனவே பல்வேறு காரணங்களை முன்வைத்து அநாவசியமாக தேர்தலில் ஈடுவதினை தவிர்க்குமாறு தேர்தல் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, நாட்டின் அரசியல் தொடர்பில் எவ்வித தொலைநோக்குப் பார்வையும் இல்லாதவர்கள் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் தேர்தலுக்காக செலவிடப்படும் பணத்தின் அளவு அதிகரிக்கக்கூடும் என ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...