அமெரிக்க தூதரகம் இலங்கைக்கு முக்கிய அறிவிப்பு!
இலங்கைசெய்திகள்

அமெரிக்க தூதரகம் இலங்கைக்கு முக்கிய அறிவிப்பு!

Share

அமெரிக்க தூதரகம் இலங்கைக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கைக்கு ஓகஸ்ட் 8-9 ஆம் திகதிகளில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலகளாவிய ஊழல் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் ரிச்சர்ட் நேப்யூ விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், அவருடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊழல் எதிர்ப்புப் பகுப்பாய்வாளர் டிலான் அய்கன்ஸ் என்பவரும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், அரசாங்கம், எதிர்க்கட்சி, சர்வதேச நாணய நிதியம், தனியார் துறை மற்றும் சிவில் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு நபர்களைச் சந்திக்கவுள்ளார்.

இதேவேளை, அவரது இந்த விஜயத்தின் நோக்கம், இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் மற்றும் ஊழலை எதிர்ப்பதற்கான முயற்சிகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதே ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 11
இலங்கைசெய்திகள்

அடுத்தவருடம் வெள்ளவத்தையில் நினைவேந்தல் செய்தால் யுத்தம் வெடிக்கும் : தேரர் எச்சரிக்கை

வெள்ளவத்தையில் நினைவேந்தலை அடுத்த வருடமும் அனுஸ்டிக்க விடாதீர்கள். அவ்வாறு நினைவேந்தல் செய்தால் மீண்டும் ஒரு யுத்தம்...

23 13
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமென கூறி குழப்பம் விளைவித்த நபர் கைது

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்க வேண்டுமெனக் கூறி குழப்பம் விளைவித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது...

24 13
இலங்கைசெய்திகள்

சுவிஸ் பெண் உட்பட 2 வெளிநாட்டவர்களின் உயிரை காப்பாற்றிய அதிகாரிகள்

மாத்தறை, மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கடல் அலையில்...

22 14
இலங்கைசெய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் ஆரம்பமாகவுள்ள புதிய வசதி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று (21) முதல் ஆரம்பிக்கப்படும்...