32 4
இலங்கைசெய்திகள்

இரவில் இருமல் வந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறவும்: வைத்திய நிபுணர் அறிவுறுத்தல்

Share

இரவில் இருமல் வந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறவும்: வைத்திய நிபுணர் அறிவுறுத்தல்

தற்போது நிலவும் குளிர் காலநிலையுடன் சிறுவர்களுக்கு காய்ச்சல் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிபுணர், கடந்த சில நாட்களாக ‘இன்புளுவன்சா’ நோயாளர்களின் அதிகரிப்பும் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக இருமல், சுவாசிப்பதில் சிரமம் போன்றவை இருந்தால் வைரஸ் காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டாம் என பெற்றோர்களிடம் மருத்துவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்த அறிகுறிகள் இருந்தால் முகமூடி அணிவது பொருத்தமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குழந்தைகளுக்கு இரவில் இருமல் வந்தால், நிமோனியா ஏற்படும் அபாயம் உள்ளதால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறவும் சுகாதாரத்துறையினர் வலியுறுத்துகின்றனர்.

Share
தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...